×

அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சீல்வைப்பு அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்தது

அரியலூர், பிப்.26: வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தேர்தலில் பணிபுரிய உள்ள அலுவலர்களின் பயிற்சிக்கும் மற்றும் வாக்காளர்களின் விழிப்புணர்வுக்காகவும் சம்மந்தப்பட்ட தொகுதியின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு வைப்பறையில் இருந்து எடுத்து சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர இருப்பு அறையிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நேற்று (25ம்தேதி) வெளியில் எடுக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பு வைப்பறை பூட்டி சீல்வைக்கப்பட்டது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 376 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 5 சதவித வாக்குப்பதிவு இயந்திரங்களான கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் தலா 19 என 57 கருவிகளும்.

ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட 377 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 5 சதவித வாக்குப்பதிவு இயந்திரகளான கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் தலா 19 என 57 கருவிகளும் என மொத்தம் 114 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியில் எடுக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பு வைப்பறை பூட்டி சீல்வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், டிஆர்ஓ ஜெய்னுலாப்தீன், ஆர்டிஓக்கள் ஏழுலை (அரியலூர்), ஜெ.பாலாஜி (பொ) (உடையார்பாளையம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, தாசில்தார்கள் குமரையா (தேர்தல்), கலைவாணன் (ஜெயங்கொண்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...