×

காரைக்காலில் மேலும் 3 பேருக்கு கொரோனா

காரைக்கால், பிப். 26: காரைக்காலில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி 293 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காரைக்கால் திருநள்ளாரை சேர்ந்த 2 பேர், கோயில்பத்து பகுதியை சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 3,985 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,887 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் தனிமையிலும், சிகிச்சையிலும் இருந்து வருகின்றனர்.

Tags : Corona ,Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...