×

அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்

அருப்புக்கோட்டை, பிப்.26: அருப்புக்கோட்டையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு சாலைவிதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடந்தது. சார்பு நீதிபதியும், தாலுகா இலவச சட்ட உதவி மைய தலைவருமான பசும்பொன் சண்முகையா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வேங்கடலெட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷினி, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மணிமேகலா ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு எஸ்.ஐக்கள் செல்லத்துரை, ஆனந்த், வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன், பொருளாளர் சீனிவாசகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்