×

திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கொள்ளை

திண்டுக்கல், பிப். 26: திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் ஓடைப்பட்டி பிரிவு அருகே வாசவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து(63). ஆதிதிராவிடர் நலத் துறையில் வார்டனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நேற்றுமுன்தினம் துவரங்குறிச்சியில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு  மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டுன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 சவரன் தங்கநகைகள் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, கொலுசு, காமாட்சி விளக்கு  உள்ளிட்ட ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவர், தாடிக்கொம்பு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்ஐ லதா மற்றும் போலீசார் கைரேகை மற்றும் தடயஅறியல் நிபுணர்களை வைத்து கொள்ளை போன வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர், மேலும் இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : Robbery ,Dindigul ,
× RELATED கொள்ளை திட்டம் 5 பேர் கைது