×

உழைப்பாளர்கள் தினமான மே 1-ல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட ஆட்சியர் உத்தரவு!

சென்னை: உழைப்பாளர்கள் தினமான மே 1-ல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்;

01.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 01.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Tags : Tasmak ,Chennai ,Labor ,Workers' Day ,Tamil Nadu ,Liquor ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள...