×

தெலங்கானா மாநில அதிகாரிகள் குமரி வருகை

நாகர்கோவில், பிப்.25: தமிழக அரசின்திட்ட செயல்பாடுகள் தொடர்பாக அறிந்திட தெலங்கானா மாநில அதிகாரிகள் குமரி மாவட்டம் வருகை தந்தனர்.தெலங்கானா முதலமைச்சரின் செயலாளர் ஸ்மித்தா சபர்வால், பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கிறிஸ்டினா இசட் சோங்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணையர் கருணா, பெண்கள் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செயலர் மற்றும் ஆணையர் திவ்யா தியாகராஜன், ஐதராபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் (குற்றங்கள் மற்றும் எஸ்ஐடி) பெண்கள் அணிகள் மற்றும் பரோசா மையங்களின் பொறுப்பாளர் ஷிகா கோயல், தெலங்கானா மாநில கூடுதல் குழு இயக்குநர் ஜெனரல்  சுவாமி லக்ரா, சுமதி, முதல்வரின் தனி அலுவலர் பிரியங்கா வர்க்கீஸ், வாராங்கால் வன பாதுகாவலர் ஆஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்கள் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலத்துறை, காவல்துறை, குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

Tags : Telangana ,Kumari ,
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!