×

காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்

விருதுநகர், பிப்.25: கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700,ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பொங்கல் போனஸ் ரூ.7ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம உதவியாளர் பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முதல் துவங்கி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 57 கிராம உதவியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திருவில்லிபுத்தூர்: இதன் ஒரு பகுதியாக திருவில்லிபுத்தூரில் வட்டதலைவர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் செல்வி முன்னிலை வகித்தார். கிராம உதவியாளர்கள் மாவட்ட செயலாளர் வைரவன் வாழ்த்துரை வழங்கினார். மாநில பொருளாளர் நாகப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை