×

தேனி மின்வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

தேனி, பிப். 25: தேனி நகரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், ஏஐடியுசி மாநில உபதலைவர் சுந்தர்ராஜன், செயல்தலைவர் அழகர்சாமி  பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, மின்வாரியத்தை தனியார்மயமாக்கக் கூடாது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பும்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் படித்த பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை லியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

Tags : Theni Electricity Board ,
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...