×

20 பேர் கைது கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

திருவாரூர், பிப்.24: காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று திருவாரூர் தாலுகா அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் லதா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தையடுத்து மறியலில் ஈடுபட்ட லதா மற்றும் மாவட்ட தலைவர் குமார் உட்பட 221 பேர் டவுன் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு பழைய நாகை சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு