×

221 பேர் கைது மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.24: மத்திய அரசை கண்டித்து நேற்று எஸ்டிபிஐ கட்சி தொழிற்சங்கத்தினர் (எஸ்டிடியூ) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையினை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், காஸ் விலை உயர்வை கண்டித்தும் உயர்த்தப்பட்ட விலையினை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் முன் எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாகுல்அமீது தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் சபீர்அகமது, எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் விலாயத்உசேன், மாவட்ட செயலாளர்கள் அப்துல் லத்தீப், உமர்பாரூக் மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் சாகுல்அமீது, முஜிபுர் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...