×

கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் நகை, பணம் கொள்ளை

கும்பகோணம், பிப். 24: கும்பகோணம் அஞ்சுகம் நகரில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. கும்பகோணம் அஞ்சுகம் நகர் 7வது தெருவில் வசிப்பவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாரதி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 தினங்களுக்கு முன் சென்னை தனியார் மருத்துவ மனைக்கு சென்றார். அங்கு காது அறுவை சிகிச்சை செய்து கொண்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பீரோக்களை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம், சிறிய அளவிலான வெள்ளி பூஜை பொருட்கள் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : VO ,Kumbakonam ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...