×

சமயபுரம் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

திருச்சி, பிப்.24: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 74 ஆயிரத்து 528 ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் கணக்கிடப்பட்டன. சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நேற்று மொத்தம் 33 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள் அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பின் முடிவில் உண்டியலில் ரொக்கமாக ஒரு கோடியே 74 ஆயிரத்து 528 ரூபாய் பணம், 2 கிலோ 533 கிராம் தங்க நகைகள், 3 கிலோ 784 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 86 இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. இதற்கு முன்பாக கடந்த 16ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Samayapuram temple ,
× RELATED பெரம்பலூர் அருகே விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனம் சிக்கியது