×

பெரம்பலூர் கலெக்டர், எஸ்பி ஆய்வு உடையார்பாளையம் அருகே இடப்பிரச்னை தகராறு:போலீசார் விசாரணை


ஜெயங்கொண்டம், பிப்.24: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த கூழாட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் பாளையன்(50). இவருக்கு உடையார்பாளையம் பெரிய ஏரி கிழக்கு கரையையொட்டி ஆதிதிராவிட நலத்துறையால் இலவச வீட்டுமனை பட்டா 2007ல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை இலவச வீட்டுமனையை பாளையன் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது காடுவெட்டாங்குறிச்சியை சேர்ந்த சாமிநாதன், தான் வாங்கிய இடத்தை நீ எப்படி சுத்தம் செய்வாய் என்று பாளையனை மிரட்டியுள்ளார். பின்னர் சாமிநாதன் உறவினரான உடையார்பாளையத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, கொளஞ்சி ஆகியோர் தகாத வார்த்தையால் திட்டி பாளையனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பாளையன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Perambalur Collector ,Udayarpalayam ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...