×

ஆலத்தூர் வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் பணி அனுபவ துவக்க விழா

பாடாலூர், பிப்.24: ஆலத்தூர் ஒன்றிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் ரோவர் வேளாண் கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவ தொடக்க விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் மற்றும் உயிர் உரம் வழங்கப்பட்டது. இதில் உதவி வேளாண் இயக்குனர் பசரியாபேகம், வேளாண் துணை இயக்குனர் ராமச்சந்திரன், வேளாண் அலுவலர் செல்வி கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கும், அதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் உயிர் உரத்தின் முக்கியத்துவம், உபயோகிக்கும் முறை பற்றி கூறப்பட்டது. விழா முடிவில் வேளாண் அலுவலக வளாகத்தில் மாணவிகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags : Work ,Alathur Agricultural Extension Center ,
× RELATED தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு