சிவகாசி, பிப். 24: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை, யங் இந்தியன்ஸ் என்ற அமைப்பு, திருத்தங்கல் போக்குவரத்து போலீசார் ஆகியோர் சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு டூவீலர் பேரணி நடத்தினர். கல்லுாரி முதல்வர் அசோக், கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் கல்லூரி மாணவர்கள், போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர். மாணவர்கள் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துறைத்தலைவர் ராஜசேகரன், தனலட்சுமி, ஜேக்கப் மதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.