×

விபத்தை ஏற்படுத்தும் வெம்பக்கோட்டை சாலை

சிவகாசி, பிப்.24: வெம்பக்கோட்டையில் விபத்தை ஏற்படுத்தும் கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். வெம்பக்கோட்டை தாலுகா பகுதியில் 48 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த பஞ்சாத்துகளில் பல கிராமங்களில் சாலைகள் போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது. போக்குவரத்து பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை விளக்குகள், வழிகாட்டி போர்டுகள், விபத்து தடுப்பு எச்சரிக்கை போர்டுகள் முறையாக வைக்கப்படவில்லை. டூவீலரில் செல்வோர் பலர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகிறது. தாயில்பட்டியில் இருந்து மடத்துப்பட்டி வழியாக கனஞ்சாம்பட்டி கிராமத்திற்கு 11 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதற்கு மாற்றாக தாயில்பட்டி- விஜயகரிசல் சாலை வழியாக 5 கி.மீட்டர் தூரத்தில் மாற்று சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலையில் பல ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. பட்டாசு ஆலைகள் இப்பகுதியில் அதிகம் இயங்கி வருகிற்து. சாலை மோசமாக உள்ளதால் டூவீலரில் செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

Tags : Vembakkottai road ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ