×

3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு

மதுரை, பிப். 24: 38 ஆண்டுகள் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். அகவிலைப்படி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகிக்க, செயலாளர் வரலெட்சுமி, பொருளாளர் ராமேஸ்வரி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு