×

உசிலம்பட்டி கல்லூரியில் தொடர் உள்ளிருப்பு

உசிலம்பட்டி, பிப். 24: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவு பேராசியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி கேட்டு முதல்வர் பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாகவும், எனவே அவரை மாற்ற கோரியும் அரசு உதவிபெறும் பேராசியர்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நேற்றும் போராட்டத்தை தொடர்ந்த அவர்களிடம் கல்லூரி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்லூரி செயலாளர் உடல்நிலை சரியில்லாததால் அவர் வந்ததும் ஆலோசனைக்கூட்டம் நடத்தி முடிவு எடுப்பதாகவும், அதற்கு மார்ச் 1 வரை கால அவகாசம் தருமாறும், அதுவரை பேராசியர்கள் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தனர். அதன்படி பேராசியர்கள் தற்காலிகமாக போரட்டத்தை கைவிட்டனர்.


Tags : Usilampatti College ,
× RELATED முதல்வர் பணம் கேட்டு டார்ச்சர்...