×

சாயர்புரம் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் சண்முகநாதன் எம்எல்ஏ வழங்கினார்

ஏரல், பிப்.24:  தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்றிருந்த பயிர்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றிருந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். சாயர்புரம் வங்கி தலைவர் அறவாழி முன்னிலை வகித்தார். வங்கி செயலர் சகுந்தலாதேவி வரவேற்றார். இதில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ கலந்து கொண்டு பயிர் கடன் பெற்றிருந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வங்கி பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கிகளின் துணைப்பதிவாளர் ரவீந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர் சேஷதிரி, அதிமுக மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், வை. மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் திருத்துவசிங், கூட்டுறவு வங்கி நிர்வாக உறுப்பினர்கள் பிரேம்குமார், ராஜசேகர், தங்கவேல், சுசீலா, வாசுகி, பெரியசெல்வம், வங்கி கேஷியர் வெங்கடாசல பெருமாள், வங்கி பணியாளர் கிருபாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Shanmuganathan ,MLA ,Sayarpuram Co-operative Bank ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...