×

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 296 பணி நியமன ஆணை

திருப்பூர், பிப்.24:தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்  தனியார்துறை வேலையளிப்பவர்கள் 59 நிறுவனத்தினர் பங்கேற்று பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தந்திருந்தனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐடிஐ டிப்ளமோ படித்தவர்கள் ஓட்டுநர்கள் மற்றும் தையல் பயிற்சி பெறுபவர்கள் என 1185 பேர் பங்கேற்றனர். இதில் 296 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 83 பேர் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...