×

குளத்தூர் அருகே சாலை வளைவில் அடிக்கடி விபத்து

குளத்தூர்,பிப்.23: குளத்தூர் அடுத்த வெங்கடாசலபுரம் அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இச்சாலை ராமேஸ்வரம்-திருச்செந்தூர் செல்லும் முக்கிய சாலையாகும். இதனால் போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் இருவளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருப்பதுடன், இவ்வளைவுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு இவ்வளைவில் அரசு பஸ் கவிழ்ந்து பெரிய விபத்துகள் நேரிட்டது. அதன்பின் இச்சாலை வளைவுகளில் தடுப்பு கம்பிகள் அமைப்பது குறித்து இப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எந்தவித பலனும் இல்லை. மேலும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதகதியில் இச்சாலையை ஆய்வு மேற்கொண்டு ஆபத்தான வளைவுகளில் தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kulathur ,
× RELATED அரசு பஸ் மோதி இன்ஜினியர் பலி