×

கல்லிடைக்குறிச்சியில் ஏழை பெண்கள் திருமணத்திற்கு தங்கம், நிதியுதவி முருகையா பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்

வி.கே.புரம், பிப். 23: அம்பை, சேரன்மகாதேவி ஒன்றியத்தைச் சேர்ந்த ஏழை பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி ஆகியவற்றை கல்லிடைக்குறிச்சியில் முருகையா பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்.  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் தமிழக அரசு சார்பில் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற விழாவுக்குத் தலைமை வகித்த முருகையா பாண்டியன் எம்எல்ஏ, அம்பை, சேரன்மகாதேவி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 351 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் பட்டதாரி பெண்களுக்கு ரூ 50 ஆயிரம், மற்ற பெண்களுக்கு ரூ 25 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார். இதில் அம்பை பிடிஓக்கள் மணி, விஜயசெல்வி, சேரன்மகா பிடிஓக்கள் சங்கரகுமார், முத்துகிருஷ்ணன் மற்றும் கூனியூர் மாடசாமி, அம்பை ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, துணைச் செயலாளர் பிராங்கிளின், நகரச் செயலாளர்கள் கண்ணன்(வி.கே.புரம்) அறிவழகன்(அம்பை) ராமையா (மணிமுத்தாறு) பழனிக்குமார் (சேரன்மகாதேவி), அம்பை நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் மாரிமுத்து, மினி சூப்பர் மார்க்கெட் கூட்டுறவு தலைவர் சங்கரலிங்கம்,  முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரச் செயலாளர் அருண், முன்னாள் கவுன்சிலர் குமார்பாண்டியன், குஞ்சு பாலு, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.







Tags : Kallidaikurichi ,Murugaya Pandian MLA ,
× RELATED விஷம் குடித்த காவலாளி சாவு