×

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றம்

திருச்சி, பிப்.23: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்சவ விழா நேற்று துவங்கியது. வருகிற மார்ச் 16ம் தேதி தேரோடடம் நடைபெறுகிறது. பஞ்ச பூததலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைகோவில் ஜெம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரமோற்சவம் 45 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரமோற்சவத்தை முன்னிட்டு சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து வரும் 11ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தகால் ஊன்றப்படுகிறது. மேலும் அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2ம் நாள் சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 3ம்நாள் பூத வாகனம், காமதேனு வாகனத்திலும், 4ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5ம் தேதி வெள்ளிரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். மார்ச் 16ம் தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது. 17ம் தேதி வெள்ளிமஞ்சத்திலும், 18ம் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், 19ம் தேதி அதிகார நந்தி வாகனம், சேஷ வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருனி உலா வருகின்றனர். 20ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. மார்ச் 30ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடக்கிறது. அப்போது சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி பங்குனி மண்டல பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.

Tags : Panguni Pramorsava ,Thiruvanaikaval Jambukeswarar Temple ,
× RELATED காஞ்சிபுரம் பங்குனி பிரமோற்சவ விழா:...