திருச்சி, பிப்.23: திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில் தமிழக முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் வழிகாட்டுதலின்படி, மறைந்த மக்கள் தலைவி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24.2.2021 (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதில் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்பட அனைத்து அணியினர் மற்றும் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், முன்னாள் கோட்டத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுகிறோம்.