×

முசிறியில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் இருவர் கைது

முசிறி, பிப்.23: திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் முருகானந்தம், கூலித்தொழிலாளி. இவரது மகன் கவுதம் (19) கல்லூரி மாணவர் கடந்த 17ம் தேதி முசிறியில் உள்ள நர்சரிதோப்பு என்ற இடத்தில் தலையில் ரத்தகாயத்துடன் இறந்து கிடந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கவுதம் அன்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. டிஎஸ்பி பிரம்மானந்தம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை தனிப்படை போலீசார் கொலையாளிகளை  தேடி வந்த நிலையில் முசிறி சுண்ணாம்புகாரை தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் ராம்கி (எ) ரகுபதி (23), முசிறி அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் அழகுமணி (38) ஆகிய இருவரும் கவுதம் கொலை வழக்கு தொடர்பாக முசிறி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தனிடம் சரண் அடைந்தனர்.

விஏஓ கொடுத்த தகவலின்பேரில் முசிறி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அழகு மணியின் தங்கை மகளை கவுதம் கேலி, கிண்டல் செய்து வந்ததாகவும், இதனை அழகுமணி பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அழகுமணி, இவரது நண்பர் ராம்கி (எ) ரகுபதியின் துணையுடன் சம்பவத்தன்று கவுதமை தந்திரமாக பேசி முசிறியில் உள்ள நர்சரி தோப்புக்கு அழைத்துச் சென்று இரும்பு பைப்பினால் தலையில் அடித்ததில் படுகாயமடைந்த கவுதம் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். தங்களை போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் நேற்று முசிறி மேற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துள்ளனர். இருவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு பைப் மற்றும் பைக் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Muziri ,
× RELATED முசிறியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறை அறிவுறுத்தல்