×

கும்பகோணம், பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை, பிப்.23: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் தாலுகா அலுவலகம் முன் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி 2 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நகர, ஒன்றிய, பேரூர் திமுக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எம்பி, பழநிமாணிக்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பார்க் எதிரே மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை எம்பி., ராமலிங்கம், எம்எல்ஏக்கள் அன்பழகன், செழியன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர். முன்னதாக பெருநகர செயலாளர் தமிழழகன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Kumbakonam ,Pattukottai ,
× RELATED கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி...