×

தஞ்சை அருகே ரயில்வே இரும்பு பொருட்களை திருடிய முதியவர் கைது

தஞ்சை, பிப்.23: தஞ்சை அருகே ரயில்வே இரும்பு பொருளை திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மண்டல ரயில்வே சீனியர் கமிஷனர் ராமகிருஷ்ணன், துணை கமிஷனர் சின்னத்துரை ஆகியோர் உத்தரவுபடி தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், கார்த்திகேயன் மற்றும் போலீசார் தஞ்சை அடுத்த அம்மாபேட்டை ரயில் நிலைய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஒருவர் சாக்குப்பையுடன் வந்து கொண்டிருந்தார். சந்தேகமடைந்த போலீசார் அந்த பையை சோதனையிட்டதில் அதில் இரும்பிலான பிஸ்பிளைட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் குளிக்கரை மேல தெருவை சேர்ந்த ஜெயராமன் (60) என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் ரயில்வே பணிக்காக தண்டவாளம் அருகே வைக்கப்பட்டிருந்த இரும்பு பிளேட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர். மேலும் போலீசார் விவசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tanjore ,
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...