×

விராலிமலை, இலுப்பூரில் 50 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்

இலுப்பூர், பிப். 23: விராலிமலை மற்றும் இலுப்பூரில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று ஆறுதல் கூறினார். இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு திடீரென நேற்று மதியம் வாந்தி மயக்கம் ஏற்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் விராலிமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று ஆறுதல் தெரிவித்து, சிகிச்சை முறை குறித்து கேட்டரிந்தார்.

Tags : Viralimalai, Iluppur ,
× RELATED விராலிமலை, இலுப்பூரில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த வழிப்பறி ஆசாமி கைது