×

விடியவிடிய நடந்தது அரியலூர் மாவட்டத்தில் 7318 மாணவ, மாணவிகளுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கல்

அரியலூர்,பிப்.23: அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கும் விழாநடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டுகளை வழங்கினார். அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 7318 மாணவ, மாணவிகளுக்கு இலவச டேட்டா காட்டு வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக்ராஜன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் மலர்விழி, மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...