×

அரியலூர் கலெக்டர் வழங்கினார் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஜெயங்கொண்டம், பிப்.23: அரியலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் மணிகண்டன் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கூட்டாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருச்சி மாவட்டம் மணக்கால் கிராமத்தை சேர்ந்தவர் காத்தான் (57). இவரும், இவருக்கு நண்பருமான அரியலூர் மாவட்டம் சின்னநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (54) இருவரும் சேர்ந்து கும்பகோணம், சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளார். இந்த பல்வேறு வழிகளில் ஈடுபட்டுள்ள மணிகண்டன், காத்தான், சத்தியமூர்த்தி ஆகியோர் மீது டிஎஸ்பி தேவராஜ், அரியலூர் டிஎஸ்பி மதன், அரியலூர் எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் அரியலூர் கலெக்டர் ரத்னா 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags : Ariyalur Collector ,
× RELATED மனு கொடுத்த 30 நிமிடத்தில் நடவடிக்கை:...