×

அரியலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,பிப்.23: அரியலூரில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். விலை உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக எழுப்பப்பட்ட கண்டன கோஷங்களில் நாளுக்கு நாள் ஏற்றப்படும் டீசல், பெட்ரோல் விலை உயர்வு அடித்தட்டு மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளதாகவும், சமையல் எரிவாயு விலை உயர்வினால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் முருகேசன், சட்டத்திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், கழக கொள்கைபரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், தில்லைகாந்தி, துணை செயலாளர்கள் தனபால், கணேசன், லதாபாலு ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், கண்ணன், ஞானமூர்த்தி, தர்மதுரை, அறிவழகன், அன்பழகன், அசோகசக்கரவர்த்தி, கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Ariyalur ,
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு