×

44 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் தேசவிளக்கி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால், பிப்.23: காரைக்கால் அடுத்த புதுத்துறையில் தேசவிளக்கி மாரியம்மன் வரலாற்று சிறப்பு மிக்கது. இங்குள்ள தேசவிளக்கி மாரியம்மன், செங்கழுநீர் விநாயகர் மற்றும் தேச விளக்கி மாரியம்மன் ஆலயத்தின் பரிவார தெய்வங்களான  அய்யனார் குட்டியாண்டவர் உள்ளிட்ட ஆலயங்களுக்கும் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 44 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்திற்கு கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து கடந்த 15ம்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து 4 கால பூஜைகளஅ நடைபெற்று முடிந்தன. நேற்று காலை கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்கள் மற்றும் செங்கழுநீர் விநாயகர் கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது . இதில் புதுத்துறை, தர்மபுரம், திருநள்ளாறு, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தேசவிளக்கி அம்மனை வழிபாடு செய்தனர்.

Tags : Karaikal ,Desavilakki Amman Temple Kumbabhishekam ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...