×

கோகூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

கீழ்வேளூர், பிப்.23: கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சியில் சுகாதாரதுறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 693 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோகூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரபு தலைமையில் டாக்டர்கள் முருகேஷ்குமார், பிரபு, கயல்விழி, விக்னேஷ், தீபிகா, ஜனனி ஆகியோர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இம்மருத்துவமுகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பொது மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம் உள்பட பரிசோதனைகள் செய்யப்பட்டது. ரத்தம், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் வடகரை, கோகூர், ஆணைமங்கலம், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 693 பேர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்றனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளார்கள், கிராம செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Gokur panchayat ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...