×

புதுப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு

வத்திராயிருப்பு, பிப். 23: வத்திராயிருப்பு பகுதியில் வத்திராயிருப்பு, சேதுநாராயணபுரம், நெடுங்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், உள்ளிட்ட ஊர்களில் தைப்பொங்கலை அடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பொங்கலையொட்டி வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் முதன்முறையாக நாளை(பிப்.24) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டில்  250க்கும் மேற்பட்ட காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். திருவில்லிப்புத்தூர் டிஎஸ்பி நமச்சிவாயம், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சுபக்குமார், எஸ்.ஐ செல்லப்பாண்டியன் உள்பட 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags : Jallikattu ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை