×

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

ராமநாதபுரம், பிப்.23: மாமனார்,நாத்தனார் கொடுமை தாங்காமல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி ரெபேக்கா. இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அப்போது திடீரென மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த போலீசார் தடுத்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘மாமனார் மற்றும் நாத்தனார் கொடுமை தாங்காமல், காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும்
எடுக்க வில்லை. இதனால் தற்கொலை செய்ய வந்ததாக’ தெரிவித்தார். குறைதீர்க்கும் கூட்டத்தில் குழந்தையுடன் வந்து தற்கொலை செய்ய முயன்ற பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ramanathapuram ,Collector's Office ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...