×

மின்சார வாரிய கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி

திண்டுக்கல், பிப். 23:திண்டுக்கல்-பழனி புறவழிச்சாலையில் உள்ள மீனாட்சிநாயக்கன்பட்டியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு பின்புறம் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இப்பகுதியில் ஆள்நடமாட்டம் இருக்காது. இந்நிலையில், இக்கட்டிடம் இடிந்து விழுந்ததில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் முகம் சிதைந்ததால், அடையாளம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது