×

பிரசவ விடுப்பில் சென்ற ஆங்கில ஆசிரியை கல்வி கற்க முடியாமல் 230 மாணவிகள் அவதி தேசூர் அரசினர் பெண்கள் பள்ளியில்

வந்தவாசி, பிப்.21: வந்தவாசி அருகே தேசூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியை பிரசவ விடுப்பில் சென்றதால் கல்வி கற்க முடியாமல் 230 மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வந்தவாசி அடுத்த தேசூரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1000க்கும் அதிகமான மாணவிகள் பயிற்று வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக முதல் கட்டமாக 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே விருப்பம் உள்ள மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இங்கு ஆங்கில ஆசிரியையாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜீவிதா என்பவர் பணிபுரிந்து வந்தார். தெள்ளாரில் தங்கி வேலை செய்து வந்த ஆசிரியை பிரசவ விடுப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக விடுப்பில் சென்றுள்ளார். இவருக்கான விடுப்பு வருகிற ஜூன் மாதம் வரை உள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு மாற்றாக யாரையும் இதுவரை மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்காமல் இருப்பதால் மாணவிகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா காலத்தில் பல மாதங்கள் விடுப்பில் இருந்த மாணவிகள் தற்போது ஆர்வத்துடன் கல்வி கற்க பள்ளி வந்துள்ள நிலையில் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியை இல்லாததால் பிளஸ் 1 பிரிவில் 150 மாணவிகளும், பிளஸ் டூ பிரிவில் 80 மாணவிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். மாவட்ட முதன்மை கல்வி அலுலவரிடம் பெற்றோர்கள் தொலை பேசிவாயிலாக புகார் செய்தபோது பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் இன்னும் இதற்கான கடிதம் அனுப்பவில்லை எனக்கூறி வருகிறாராம். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து. மே மாதம் நடைபெற உள்ள பொதுதேர்வுக்கு மாணவிகள் தயாராகும் நிலையில் ஆங்கில ஆசிரியை ஒருவரை நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : State Women's School of ,Goddhi Desur ,
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...