×

க.பரமத்தி பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் நிற்கும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

க.பரமத்தி, பிப்.21: கரூரில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 18 கி.மீ. தொலைவில் க.பரமத்தி கடைவீதி உள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கடைவீதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறி கரூர் சென்று தங்களது பணிகள் முடிந்து மீண்டும் ஊர் திரும்புகின்றனர். இதில் சிலர் தினமும் டூவீலர்களில் கரூருக்கு சென்று பணிகள் முடிந்து ஊர் திரும்புகின்றனர். இந்நிலையில் காலை, மாலை நேரங்களில் பவித்திரம் முதல் காருடையாம்பாளையம் அடுத்த க.பரமத்தி கடைவீதி வரை உள்ள தனியார் ஓட்டல்கள் மற்றும் டீ கடைகள் முன் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஜல்லி லாரிகளை வாகன ஓட்டுனர்கள் நிறுத்தி விடுகின்றனர். நிறுத்தப்பட்ட லாரிகளை மணிக்கணக்கில் யாரும் கண்டுகொள்வதில்லை. சாலையின் இருபுறமும் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட காரணமாக உள்ளது. எனவே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் லாரி வாகன ஓட்டுனர்கள் மீது போக்குவரத்து ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே விதிமீறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Parramatta ,
× RELATED பரமக்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி...