×

டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து ஈசநத்தத்தில் பொக்லைன் உரிமையாளர்கள் ஸ்டிரைக்

அரவக்குறிச்சி, பிப்.21: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ஈசநத்தத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் துவங்கியது. டீசல் மற்றும் பெட்ரோல் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் வாடகை வாகனங்கள், டிராக்டர், பொக்லைன் உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு பயன்படும் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டீசல் விலை உயர்வினால் இவ்வாகனங்களின் வாடகை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் விவசாயம் பணிகளுக்கான செலவுகள் உயரும் வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களின் விலை உயரும் . இந்நிலையில் விவசாய பணிகளுக்கு அதிக அளவில் பயன் படுத்தப்படும் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் ஈசநத்தம், அரவக்குறிச்சி உள்ளிட்ட அரவக்குறிச்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் 2-நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Bogline ,
× RELATED 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக வயலில்...