×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

நாகை, பிப்.21: நாகையில் திமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை வகித்தார். கடந்த 14ம் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்.எல்ஏக்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது. வரும் சட்டசபை தேர்தலில் கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினை முதலமைச்சராக்க கடைக்கோடி தொண்டன் வரை பாடுபடுவது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (22ம் தேதி) நாகையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்எல்ஏ மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் திருமலைச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Nagaland ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி