×

காரைக்கால் மாவட்ட அளவில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

காரைக்கால், பிப்.21: காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், என் பேட் என் உரிமை என்னும் தலைப்பில் மாதவிடாய் சம்மந்தமாக மாவட்ட அளவிலான பெண்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை காரைக்கால் கலெக்டர் அர்ஜூன்சர்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை என்ஏபி பவுண்டேஷன் மற்றும் வட்டார வளர்ச்சித்துறை இணைந்து செய்திருந்தது. என்பேட் என் உரிமை திட்டத்தின்கீழ் காரைக்கால் மாவட்டத்தில் நாப்கின் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து இதற்கென மகளிர் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் வேலைகள்தொடங்கவுள்ளதாக வட்டார வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...