×

காரைக்காலில் மேலும் 3 பேருக்கு கொரோனா

காரைக்கால், பிப்.21: காரைக்காலில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 20.2.2021 அன்று 412 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் கோவில்பத்து பகுதியில் 2 பேருக்கும், நிரவியில் ஒருவருக்கும் என 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளது. 3967 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு 3,877 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் தனிமையிலும், சிகிச்சையிலும் இருந்து வருகின்றனர். 71 பேர் கொரோனா தொற்றுடன் உயிரிழந்துள்ளனர். 481 சுகாதார பணியாளர்களுக்கும், 54 முன் களப்பணியாளர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 32 பேருக்கு 2வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : Corona ,Karaikal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...