×

மாட்டு வண்டிகளுடன் திரண்டதால் பரபரப்பு தூங்கிய பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

பெரம்பலூர், பிப். 21: பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு ராஷினி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(33). காய்கறி வியாபாரி. இவரது மனைவி ரேவதி(28). இவர்களது மகன் பரனேஷ்(5). இவர்கள் மாடி வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் பக்கத்து வீட்டு மாடி வழியாக ஏறி, சண்முக சுந்தரத்தின் வீட்டுக்குள் புகுந்து அவர் மனைவி கழுத்தில் கிடந்த ஒன்னே முக்கால் பவுன் தாலி செயினை பறித்து சென்று விட்டார். இதுபற்றி பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thali Chain ,
× RELATED பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு