×

கலெக்டர் தகவல் ஜெயங்கொண்டம் அருகே வைக்கோல் லாரி கவிழ்ந்து விபத்து

ஜெயங்கொண்டம், பிப்.21: ஜெயங்கொண்டம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி நிலை தடுமாறி கவிழ்ந்தது. திருவாரூர் பகுதியிலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக கடலூர் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் வடுகர்பாளையம் கிராமத்திற்கு முன் இரண்டு வேகத்தடைகள் உள்ளன. திருவாரூரிலிருந்து இரவு வேகமாக வந்த வைக்கோல் லாரி வேகத்தடையில் ஏறி இறங்கியதும் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Tags : Jayangondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...