புதுக்கோட்டை, பிப்.21: பெட்ரோல், காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் நகரத் தலைவர் இப்ராஹிம்பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.