×

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி காங்கிரஸ் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

பொன்னமராவதி, பிப்.21:பொன்னமராவதி அருகே காரையூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது: பாரதிய ஜனதா கட்சி பெரும் முதலாளிகளுக்கான கட்சி. தற்போது அறிவித்துள்ள பட்ஜெட் விவசாயிகளுக்கான பட்ஜெட் அல்ல. அது பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் பட்ஜெட் ஆகவே இருக்கிறது. தற்போது தமிழக முதலமைச்சர் 10 லட்சம் வழக்குகளை தள்ளுபடி செய்து உள்ளதாக அறிவித்துள்ளார். எதற்காக இந்த வழக்குகளை போட்டார் என்பதே தெரியவில்லை. விவசாய கடன்கள் ரத்து முறையாக விவசாயிகளுக்கு சென்றடையவேண்டும். கிசான் திட்டத்தினைபோல் ஏதேனும் குளறுபடிகள் நடந்து பெரும் முதலாளிகள் பயன்படும் வகையில் விவசாய கடன் திட்டம் இல்லாமல் இருக்கவேண்டும் இவ்வாறு பேசினார்.
இதில் முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம், வட்டாரத் தலைவர்கள் குமார், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister Vijayabaskar ,Congressional ,Booth Committee ,
× RELATED தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும்...