×

₹1.65 கோடி மதிப்பில் சாலை பணிகள் ஆய்வு

அரூர், பிப்.21: மொரப்பூரில் இருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் உள்ள நவலை கிராமத்தில், ஏரிக்கரை வளைவு சாலை குறுகலாக உள்ளது. இதனால் விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள்  நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ₹1.65 கோடி மதிப்பீட்டில், நவலை ஏரிக்கரை வளைவு சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏரிக்கரை இருபுறமும் சுமார் 4 மீ. அளவிற்கு அகலப்படுத்தப்பட்டது. முடிவுற்ற இப்பணியை அரூர் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயசங்கர், இளநிலை பொறியாளர் பாஸ்கரன், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஒப்பந்தாரரும், கம்பைநல்லூர் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான வேடியப்பன் உடனிருந்தார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா