×

ஆலங்குளத்தில் புதிய ஆவின் பாலகம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

சிவகாசி, பிப்.21: சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் புதிய ஆவின் பாலக விற்பனை நிலையம் நேற்று திறக்கப்பட்டது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவின் பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 1500 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு மற்றும் எழுது பொருட்களும் 2,500 ஏழை,எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளும் வெம்பக்கோட்டை அதிமுக சார்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். நிகழ்ச்சிக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளர் விஜயநல்லதம்பி வரவேற்றார். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட கவுன்சிலர் மாலதி, விஜயநல்ல தம்பி முன்னிலை வகித்தார். முதல் விற்பனையை அமைச்சர் துவக்கி வைக்க, சாத்தூர் நகர செயலாளர் எம்.எஸ்.கே.எஸ் இளங்கோவன் பெற்றுக்கொண்டார். மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம் மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Rajendrapalaji ,Avin Palakam ,Alangulam ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...