×

அருப்புக்கோட்டை,ராஜபாளையத்தில் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

அருப்புக்கோட்டை,பிப்.21: அருப்புக்கோட்டை,ராஜபாளையத்தில் போலீசாருக்கான கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ் முகாமிற்கு தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் கோமதி, காவல் துறையினருக்கு தடுப்பூசிக்கான ஆலோசனைகளையும், விழிப்புணர்வு குறித்தும் எடுத்துக் கூறினார். முகாமை தொடங்கி வைத்து டிஎஸ்பி சகாயஜோஸ், பேசியதாவது, ‘‘இத்தடுப்பூசி பாதுகாப்பானது. முன்களப்பணியாளர்கள் எனும் வகையில் காவல் துறையினருக்கு போடப்படுவதாக ெதரிவித்தார். பின்னர் தடுப்பூசியையும் அவர், போட்டுக்கொண்டார். நகராட்சி மருத்துவ அலுவலர் முன்னிலையில் செவிலியர்கள் மூலம் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட  போலீசார் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் தளவாய்புரம், சேத்தூர், கீழராஜகுலராமன், ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நேற்று ராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துணை கண்காணிப்பாளர் நாகஷங்கர் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலைய  தலைமை மருத்துவர் கருணாகரபிரபு தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் அனைவருக்கும் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து தடுப்பூசி போட்டனர்.

Tags : Aruppukottai ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...