×

சாக்கலூத்து மெட்டுச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் மார்ச் 1ல் நடக்கிறது

தேவாரம், பிப். 21: தேவாரத்தில் சாக்கலூத்து மெட்டு சாலை திட்டத்தை நிறைவேற்றக்கோரி, மார்ச் 1ல் போராட்டம் நடத்த, விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவாரத்தில் உள்ள வஉசி மைதானம் அருகே விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக செ.நல்லுசாமி, தலைவர் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பிலும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், ஐந்து மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள். ஆர்.டி. ராஜீவ்காந்தி துணைத்தலைவர், அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் ஏலக்காய் விவசாயிகள், ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்கள் தேவாரம் ஏ.பி.எம்.வெள்ளைச்சாமி வர்த்தக சங்கம், தேவாரம் முருகன், சுற்றுச்சூழல் விவசாய சங்கம், தேவாரம் தாமஸ்-இணைச்செயலாளர்-ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் பிப்.1ல் சாக்குலூத்து மெட்டு சாலை அமைக்க வலியுறுத்தி அனைத்து மக்களையும் திரட்டி சாக்குலூத்து சென்று போராட்டம் நடத்தி சாலை அமைப்பது என்றும் இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வர்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Chakkalu Metro ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது